என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அய்யலூர் அருகே பள்ளி மாணவி காரில் கடத்தல்
Byமாலை மலர்21 Sep 2019 10:37 AM GMT (Updated: 21 Sep 2019 10:37 AM GMT)
அய்யலூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் எச்சரித்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
வடமதுரை:
அய்யலூர் அருகே அப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 13 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை அவரது உறவினர் கடத்தியது தெரிய வந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக மாணவியை கடத்தியுள்ளார். எனவே போலீசார் வாலிபரை எச்சரித்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
மற்றொரு சம்பவம்...
வடமதுரையைச் சேர்ந்த இளம்பெண் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று நடந்து சென்ற இவரிடம் மணி என்பவர் போதையில் ரகளை செய்துள்ளார். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி மணியை கடுமையாக தாக்கினர். வடமதுரை போலீசார் அவரை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அய்யலூர் அருகே அப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 13 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை அவரது உறவினர் கடத்தியது தெரிய வந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக மாணவியை கடத்தியுள்ளார். எனவே போலீசார் வாலிபரை எச்சரித்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
மற்றொரு சம்பவம்...
வடமதுரையைச் சேர்ந்த இளம்பெண் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று நடந்து சென்ற இவரிடம் மணி என்பவர் போதையில் ரகளை செய்துள்ளார். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி மணியை கடுமையாக தாக்கினர். வடமதுரை போலீசார் அவரை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X