search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் மெக்கானிக் தற்கொலை - போலீசார் விசாரணை

    கோவையில் மெக்கானிக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்துரு குமார் (வயது20). இவர் கோவையில் தங்கி கணேசபுரத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அவரது தாய் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் அவரது தந்தை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தனியாக சென்றுவிட்டார்.

    இதனால் சந்துரு குமார் வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்தை மதுவில் கலந்து குடித்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று தனது சொந்த ஊருக்கு சென்றார். இந்த நிலையில் அங்கு அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேறு சம்பவங்கள்...

    கோவை ராம்நகர் பட்டேல் வீதியை சேர்ந்தவர் மனோஜ் குமார்(24). இவர் குன்னத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலி இருந்தது. இதற்காக வேலையை விட்டு விட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு மீண்டும் கடும் வயிற்று வலி ஏற்படவே வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை ஆனைமலை ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ்(30). தொழிலாளி. இவரது மனைவி மாசிலாமணி (26). இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த அவரது மனைவி குழந்தையை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று தனியாக வசித்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்து காணப்பட்ட சுந்தரராஜன் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    Next Story
    ×