என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு- பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைத்தது திமுக
Byமாலை மலர்21 Sep 2019 7:57 AM GMT (Updated: 21 Sep 2019 9:41 AM GMT)
தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு நடைபெறவிருந்த முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பதால் கட்சி நிர்வாகிகளிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், அக்டோபர் 6ம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அக்டோபர் 6ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.
கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில், அக்டோபர் 6ம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X