என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி
Byமாலை மலர்21 Sep 2019 3:30 AM GMT (Updated: 21 Sep 2019 3:30 AM GMT)
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமானி மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியத்தின் இந்த பரிந்துரையை மறு பரிசீலனை செய்யக் கோரி அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமானி பதவி விலகல் கடிதம் அளித்தார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். தலைமை நீதிபதியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமானி மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியத்தின் இந்த பரிந்துரையை மறு பரிசீலனை செய்யக் கோரி அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமானி பதவி விலகல் கடிதம் அளித்தார்.
ஆனால் அவரது ராஜினாமா கடிதம் மீது ஜனாதிபதியின் முடிவு குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளின் விசாரணை நடத்தப்படவில்லை.
கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது ஜனாதிபதி முடிவு எடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், ஐகோர்ட்டின் நிர்வாக நடவடிக்கையில் இருந்தும் தலைமை நீதிபதி தஹில் ரமானி விலகி இருந்தார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். தலைமை நீதிபதியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X