என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றவர் கைது
Byமாலை மலர்20 Sep 2019 5:34 PM GMT (Updated: 20 Sep 2019 5:34 PM GMT)
திருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் காலனியை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 36). இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, தகராறு உள்பட 16 வழக்குகள் திருவண்ணாமலை தாலுகா மற்றும் கிழக்கு போலீஸ் நிலையங்களில் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை காஞ்சி சாலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் அருகில் இவர் கையில் கத்தியை வைத்து கொண்டும், தகாத வார்த்தைகளால் பேசி கொண்டும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏன் இவ்வாறு செய்து கொண்டு இருக்கிறாய்? என்று தேவதாசிடம் கேட்டு உள்ளனர். அப்போது அவர் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் பேசி சப்-இன்ஸ்பெக்டர் ரவியையும் கத்தியால் குத்த முயன்றார்.
இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் தேவதாசை திருவண்ணாமலை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X