என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் தனியார் பஸ் மோதல் - பனியன் தொழிலாளி உயிரிழப்பு
Byமாலை மலர்20 Sep 2019 9:31 AM GMT (Updated: 20 Sep 2019 9:31 AM GMT)
திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் பிச்சம்பாளையம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 22). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய நண்பரான துவாரகை நகரை சேர்ந்த சக்திவேலுவுடன்(22) மோட்டார் சைக்கிளில் தாராபுரம் ரோட்டில் சென்றார். மோட்டார் சைக்கிளை சக்திவேல் ஓட்ட, ராஜபாண்டி பின்னால் அமர்ந்து இருந்தார்.
தாராபுரம் ரோடு கே.எஸ்.சி. மாநகராட்சி பள்ளி வீதி சந்திப்பு அருகே சென்றபோது அந்த வழியாக திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது. இந்த விபத்தில் ராஜபாண்டி பலத்த காயமடைந்தார். சக்திவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த ராஜபாண்டியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் பிச்சம்பாளையம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 22). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய நண்பரான துவாரகை நகரை சேர்ந்த சக்திவேலுவுடன்(22) மோட்டார் சைக்கிளில் தாராபுரம் ரோட்டில் சென்றார். மோட்டார் சைக்கிளை சக்திவேல் ஓட்ட, ராஜபாண்டி பின்னால் அமர்ந்து இருந்தார்.
தாராபுரம் ரோடு கே.எஸ்.சி. மாநகராட்சி பள்ளி வீதி சந்திப்பு அருகே சென்றபோது அந்த வழியாக திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது. இந்த விபத்தில் ராஜபாண்டி பலத்த காயமடைந்தார். சக்திவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த ராஜபாண்டியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X