search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    ஆரப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    ஆரப்பாளையம் பகுதியில் நாளை (சனிக்கிழமை) மின்சப்ளை நிறுத்தப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மேற்கு மின் வினியோக செயற்பொறியாளர் ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசரடியில் துணை மின் நிலையத்தில் நாளை (21-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் சம்மட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம் நகர், எச்.எம்.எஸ்.காலனி, டோக் நகர் 4-16 தெரு, தேனி மெயின்ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குசாலை, வ.உ.சி. மெயின்ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக் நகர் 1-3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில்ரோடு, மேலப்பொன்னகரம் 2,3,10-வது தெரு, கனரா வங்கி முதல் டாக்சி ஸ்டாண்டு வரை, ஆர்.வி.நகர், ஞான ஒளிவுபுரம் விசுவாசபுரி 1-5 தெரு பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

    இதே போல் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி, ஏரியா, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1-5 தெரு, சொக்கலிங்கநகர் 1-8 தெரு, பொன்மேனி சம்மட்டிபுரம், பொன்மேனி மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திரா நகர், குட்செட் ரோடு, மீனாட்சி பஜார், தெற்கு மண்டல அலுவலக பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×