search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அரியாங்குப்பத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற வியாபாரி கைது

    அரியாங்குப்பத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகிறார்கள்.
    பாகூர்:

    அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட் பகுதியில் 3 நம்பர் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.

    அப்போது ஒரு காய்கறி கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு 2 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். 
    இதையடுத்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற் றொருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். 

    விசாரணையில் அவர் அரியாங்குப்பம் கோட்டை மேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வாழைக்காய்  வியாபாரி  ராஜேந்திரன் (வயது 60) என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த சீனு என்ற சீனுவாசன் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சீனுவை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×