search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமணத்துக்காக மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

    திண்டுக்கல் அருகே திருமணத்துக்காக மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த மில்லில் அஞ்சு குழிப்பட்டியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் வேலைக்கு சென் றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

    காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்துள்ளனர். இந்த விவகாரம் அவர்களது பெற்றோருக்கு தெரியவரவே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மைனர் பெண்ணை பிரகாஷ் கடத்தி சென்றார்.

    இது குறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் காதர் மைய்தீன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காதல் ஜோடியை தேடி வந்தனர். சின்னதாராபுரம் பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பிரகாஷ் மற்றும் இளம்பெண்ணை அழைத்து வந்தனர். பிரகாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×