search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி வியாபாரிகள் மீது ஆசிட் வீசி ரூ.8 லட்சம் பறிப்பு

    குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி வியாபாரிகள் மீது ஆசிட் வீசி ரூ.8 லட்சம் பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருவண்ணாமலை வேலு நகரைச் சேர்ந்வர் புருசோத்தமன். இவரது மகன்கள் மீனாட்சிசுந்தரம் (32), சதீஷ். இருவரும் நகை வியாபாரம் செய்து வந்தனர்.

    இவர்களிடம் மதுரையைச்சேர்ந்த விக்ரம் என்பவர் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி உள்ளார். இதற்காக பெருங்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வரும் படி விக்ரம் கூறினார்.

    இதனை நம்பி சகோதரர்கள் மீனாட்சிசுந்தரம், சதீஷ் ரூ.8 லட்சத்துடன் பெருங்குடி சென்றனர். குறிப்பிட்ட வீட்டை அடைந்ததும் அங்கு விக்ரம் உள்பட 8 பேர் இருந்தனர்.

    அவர்கள் சகோதரர்களிடம் இருந்த பணத்தை கத்தியை காட்டி மிரட்டி பறிக்க முயன்றனர். அவர்கள் தர மறுத்ததால் மீனாட்சி சுந்தரம் மற்றும் சதீஷ் மீது ஆசிட் வீசினர். இதில் இருவரும் காயம் அடைந்த நிலையில் பணத்தை பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    இதுகுறித்து பெருங்குடி போலீசில் மீனாட்சிசுந்தரம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரம், முனிச்சாலை வால்டர் முருகன், அனுப்பானடி செந்தில்குமார் என்ற ஓட்டையன், முத்துப்பாண்டி, வினோத், கண்மேடு மணிகண்டன், ஆண்டாள் கொட்டாரம் சிவா, பெருங்குடி பெரியசாமி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×