என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம் - போலீசார் விசாரணை
Byமாலை மலர்19 Sep 2019 5:01 AM GMT (Updated: 19 Sep 2019 5:01 AM GMT)
போடியில் திருமணமான 2 மாதத்தில் மர்மமான முறையில் இறந்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி நகராட்சி பேட்டையை சேர்ந்தவர் வசந்தா(வயது29). இவருக்கும் தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
வசந்தா சரியாக சாப்பிடாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். இதனைதொடர்ந்து போடியில் உள்ள தனது வீட்டில் தங்கி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தன்று காலை தண்ணீர் குடித்தவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். போடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை சோதித்த டாக்டர்கள் வசந்தா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வசந்தாவின் சகோதரர் குமார் கொடுத்த புகாரின்பேரில் போடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆவதால் உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் மற்றும் டி.எஸ்.பி ஈஸ்வரன் ஆகியோர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போடி நகராட்சி பேட்டையை சேர்ந்தவர் வசந்தா(வயது29). இவருக்கும் தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
வசந்தா சரியாக சாப்பிடாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். இதனைதொடர்ந்து போடியில் உள்ள தனது வீட்டில் தங்கி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தன்று காலை தண்ணீர் குடித்தவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். போடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை சோதித்த டாக்டர்கள் வசந்தா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வசந்தாவின் சகோதரர் குமார் கொடுத்த புகாரின்பேரில் போடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆவதால் உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் மற்றும் டி.எஸ்.பி ஈஸ்வரன் ஆகியோர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X