search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    நரேந்திர மோடி பிறந்தநாள் விழா- பாஜக சார்பில் ரத்ததானம்

    பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை கரூர் மாவட்ட பா.ஜ.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
    கரூர்:

    பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை கரூர் மாவட்ட பா.ஜ.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். கரூர் மாவட்ட ஓ.பி.சி. அணி சார்பில் கரூர் வாங்கல் மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் புதிய கொடி கம்பம் அமைக்கப்பட்டு கட்சி கொடியேற்றப்பட்டது. பின்னர் கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

    ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் கணேச மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பா.ஜ.க. தலைவர் முருகானந்தம் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.

    இருவேறு நிகழ்ச்சிகளிலும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கைலாசம், கிருஷ்ணமூர்த்தி, நகரதலை வர் செல்வம், வெளிமாவட்ட தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் பிரபு, ஒன்றிய தலைவர் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பா.ஜ.க. தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×