என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நரேந்திர மோடி பிறந்தநாள் விழா- பாஜக சார்பில் ரத்ததானம்
Byமாலை மலர்18 Sep 2019 2:30 PM GMT (Updated: 18 Sep 2019 2:30 PM GMT)
பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை கரூர் மாவட்ட பா.ஜ.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
கரூர்:
பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை கரூர் மாவட்ட பா.ஜ.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். கரூர் மாவட்ட ஓ.பி.சி. அணி சார்பில் கரூர் வாங்கல் மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் புதிய கொடி கம்பம் அமைக்கப்பட்டு கட்சி கொடியேற்றப்பட்டது. பின்னர் கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் கணேச மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பா.ஜ.க. தலைவர் முருகானந்தம் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.
இருவேறு நிகழ்ச்சிகளிலும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கைலாசம், கிருஷ்ணமூர்த்தி, நகரதலை வர் செல்வம், வெளிமாவட்ட தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் பிரபு, ஒன்றிய தலைவர் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பா.ஜ.க. தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X