search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிர்தப்பிய லாவண்யா
    X
    உயிர்தப்பிய லாவண்யா

    குடிபோதையில் இருந்ததால் எங்களை தந்தை ஆற்றில் தூக்கி போட்டார் - உயிர்தப்பிய லாவண்யா பேட்டி

    குடிபோதையில் இருந்ததால் என்னையும் தங்கையையும் தந்தை ஆற்றில் தூக்கி போட்டதாக உயிர் பிழைத்த லாவண்யா கூறியுள்ளார்.
    கும்பகோணம்:

    தந்தை பாண்டி ஆற்றில் தூக்கி வீசியதில் லாவண்யா மீட்கப்பட்டார். அதிர்ச்சியில் இருந்து மீளாத சிறுமி லாவண்யா, கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எங்களை நேற்று மாலை பள்ளியில் இருந்து தந்தை பாண்டி அழைத்து சென்றார். அப்போது அவர் மதுபோதையில் இருந்தார்.

    பின்னர் அங்குள்ள அரசலாற்று பாலத்தில் என்னையும், தங்கை ஸ்ரீமதியையும் உட்கார வைத்தார்.

    அப்போது உங்கள் இருவரையும் இந்த ஆற்றில் தூக்கிப்போட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு நான், ஆற்றில் தூக்கி போட்டால் நாங்கள் 2 பேரும் செத்து போய் விடுவோம் என்று கூறினேன்.

    அந்த சமயத்தில் திடீரென கோபத்துடன் இருந்த தந்தை என்னை, முதலில் தூக்கி ஆற்றில் போட்டார். இதனால் தண்ணீரில் தத்தளித்த நான் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று சத்தம் போட்டேன்.

    அப்போது அங்கு நின்ற சிலர், ஆற்றில் குதித்து என்னை காப்பாற்றினர்.

    ஆற்றில் என்னை தூக்கி போட்ட பிறகு, எனது தந்தை ஸ்ரீமதி, பயந்து போய் ஓடி உள்ளார். இதனால் எனது தங்கையை ஆற்றில் தூக்கி போட்டதை நான் பார்க்கவில்லை. ஆனால் தந்தை தான் இருவரையும் தூக்கி வீசினேன் என்று கூறினார். எனது தங்கை கதி என்ன என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×