என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிபோதையில் இருந்ததால் எங்களை தந்தை ஆற்றில் தூக்கி போட்டார் - உயிர்தப்பிய லாவண்யா பேட்டி
Byமாலை மலர்18 Sep 2019 11:49 AM GMT (Updated: 18 Sep 2019 11:49 AM GMT)
குடிபோதையில் இருந்ததால் என்னையும் தங்கையையும் தந்தை ஆற்றில் தூக்கி போட்டதாக உயிர் பிழைத்த லாவண்யா கூறியுள்ளார்.
கும்பகோணம்:
தந்தை பாண்டி ஆற்றில் தூக்கி வீசியதில் லாவண்யா மீட்கப்பட்டார். அதிர்ச்சியில் இருந்து மீளாத சிறுமி லாவண்யா, கண்ணீர் மல்க கூறியதாவது:-
எங்களை நேற்று மாலை பள்ளியில் இருந்து தந்தை பாண்டி அழைத்து சென்றார். அப்போது அவர் மதுபோதையில் இருந்தார்.
பின்னர் அங்குள்ள அரசலாற்று பாலத்தில் என்னையும், தங்கை ஸ்ரீமதியையும் உட்கார வைத்தார்.
அப்போது உங்கள் இருவரையும் இந்த ஆற்றில் தூக்கிப்போட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு நான், ஆற்றில் தூக்கி போட்டால் நாங்கள் 2 பேரும் செத்து போய் விடுவோம் என்று கூறினேன்.
அந்த சமயத்தில் திடீரென கோபத்துடன் இருந்த தந்தை என்னை, முதலில் தூக்கி ஆற்றில் போட்டார். இதனால் தண்ணீரில் தத்தளித்த நான் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று சத்தம் போட்டேன்.
அப்போது அங்கு நின்ற சிலர், ஆற்றில் குதித்து என்னை காப்பாற்றினர்.
ஆற்றில் என்னை தூக்கி போட்ட பிறகு, எனது தந்தை ஸ்ரீமதி, பயந்து போய் ஓடி உள்ளார். இதனால் எனது தங்கையை ஆற்றில் தூக்கி போட்டதை நான் பார்க்கவில்லை. ஆனால் தந்தை தான் இருவரையும் தூக்கி வீசினேன் என்று கூறினார். எனது தங்கை கதி என்ன என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தந்தை பாண்டி ஆற்றில் தூக்கி வீசியதில் லாவண்யா மீட்கப்பட்டார். அதிர்ச்சியில் இருந்து மீளாத சிறுமி லாவண்யா, கண்ணீர் மல்க கூறியதாவது:-
எங்களை நேற்று மாலை பள்ளியில் இருந்து தந்தை பாண்டி அழைத்து சென்றார். அப்போது அவர் மதுபோதையில் இருந்தார்.
பின்னர் அங்குள்ள அரசலாற்று பாலத்தில் என்னையும், தங்கை ஸ்ரீமதியையும் உட்கார வைத்தார்.
அப்போது உங்கள் இருவரையும் இந்த ஆற்றில் தூக்கிப்போட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு நான், ஆற்றில் தூக்கி போட்டால் நாங்கள் 2 பேரும் செத்து போய் விடுவோம் என்று கூறினேன்.
அந்த சமயத்தில் திடீரென கோபத்துடன் இருந்த தந்தை என்னை, முதலில் தூக்கி ஆற்றில் போட்டார். இதனால் தண்ணீரில் தத்தளித்த நான் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று சத்தம் போட்டேன்.
அப்போது அங்கு நின்ற சிலர், ஆற்றில் குதித்து என்னை காப்பாற்றினர்.
ஆற்றில் என்னை தூக்கி போட்ட பிறகு, எனது தந்தை ஸ்ரீமதி, பயந்து போய் ஓடி உள்ளார். இதனால் எனது தங்கையை ஆற்றில் தூக்கி போட்டதை நான் பார்க்கவில்லை. ஆனால் தந்தை தான் இருவரையும் தூக்கி வீசினேன் என்று கூறினார். எனது தங்கை கதி என்ன என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X