search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    டானிக் என நினைத்து பூச்சி மருந்து குடித்த கூலித்தொழிலாளி பலி

    நிலக்கோட்டை அருகே டானிக் என நினைத்து பூச்சி மருந்து குடித்து கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலியானார்.
    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கருத்தாண்டிபட்டியைச் சேர்ந்த அய்யர் சாமி மகன் ஆனந்தன் (வயது 34). இவர் கூலி தொழிலாளி. இவர் தனக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்ததால் வீட்டில் எப்போதுமே வயிற்று வலிக்கான மருந்து வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலிக்கான மருந்து இருந்த இடத்திற்கு பக்கத்திலேயே பூச்செடிக்கு அடிப்பதற்காக பூச்சி மருந்தும் வைக்கப்பட்டு இருந்தது. அவசரத்தில் அதனை கவனிக்காமல் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

    பின்னர் பூச்சி மருந்தை குடித்தது தெரியவந்ததால் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இவரது மனைவி வீரலட்சுமி மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் ஆனந்தனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து வீரலட்சுமி (25) விளாம்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தயாநிதியிடம் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இறந்த ஆனந்தனுக்கு அகிலேஷ் என்ற குழந்தை உள்ளது.
    Next Story
    ×