என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டானிக் என நினைத்து பூச்சி மருந்து குடித்த கூலித்தொழிலாளி பலி
Byமாலை மலர்18 Sep 2019 7:53 AM GMT (Updated: 18 Sep 2019 7:53 AM GMT)
நிலக்கோட்டை அருகே டானிக் என நினைத்து பூச்சி மருந்து குடித்து கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலியானார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கருத்தாண்டிபட்டியைச் சேர்ந்த அய்யர் சாமி மகன் ஆனந்தன் (வயது 34). இவர் கூலி தொழிலாளி. இவர் தனக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்ததால் வீட்டில் எப்போதுமே வயிற்று வலிக்கான மருந்து வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலிக்கான மருந்து இருந்த இடத்திற்கு பக்கத்திலேயே பூச்செடிக்கு அடிப்பதற்காக பூச்சி மருந்தும் வைக்கப்பட்டு இருந்தது. அவசரத்தில் அதனை கவனிக்காமல் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
பின்னர் பூச்சி மருந்தை குடித்தது தெரியவந்ததால் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இவரது மனைவி வீரலட்சுமி மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் ஆனந்தனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து வீரலட்சுமி (25) விளாம்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தயாநிதியிடம் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இறந்த ஆனந்தனுக்கு அகிலேஷ் என்ற குழந்தை உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கருத்தாண்டிபட்டியைச் சேர்ந்த அய்யர் சாமி மகன் ஆனந்தன் (வயது 34). இவர் கூலி தொழிலாளி. இவர் தனக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்ததால் வீட்டில் எப்போதுமே வயிற்று வலிக்கான மருந்து வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலிக்கான மருந்து இருந்த இடத்திற்கு பக்கத்திலேயே பூச்செடிக்கு அடிப்பதற்காக பூச்சி மருந்தும் வைக்கப்பட்டு இருந்தது. அவசரத்தில் அதனை கவனிக்காமல் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
பின்னர் பூச்சி மருந்தை குடித்தது தெரியவந்ததால் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இவரது மனைவி வீரலட்சுமி மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் ஆனந்தனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து வீரலட்சுமி (25) விளாம்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தயாநிதியிடம் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இறந்த ஆனந்தனுக்கு அகிலேஷ் என்ற குழந்தை உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X