search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கழுகுமலை அருகே அதிக மாத்திரைகள் தின்று பிளஸ்-1 மாணவி தற்கொலை

    கழுகுமலை அருகே அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகள் தின்று பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    கழுகுமலை:

    தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் சி.ஆர்.காலனியைச் சேர்ந்தவர் சிவசாமி, கூலி தொழிலாளி. இவருடைய மகள் தேன்மொழி (வயது 17). இவர் கழுகுமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாததால், பெற்றோர் கண்டித்தனர்.

    சம்பவத்தன்று தேன்மொழி பள்ளிக்கு செல்லவில்லை. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த தேன்மொழி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

    உடனே அவரை கழுகுமலை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்த தேன்மொழிக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அவரை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு தேன்மொழியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×