என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கழுகுமலை அருகே அதிக மாத்திரைகள் தின்று பிளஸ்-1 மாணவி தற்கொலை
Byமாலை மலர்17 Sep 2019 5:05 PM GMT (Updated: 17 Sep 2019 5:05 PM GMT)
கழுகுமலை அருகே அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகள் தின்று பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கழுகுமலை:
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் சி.ஆர்.காலனியைச் சேர்ந்தவர் சிவசாமி, கூலி தொழிலாளி. இவருடைய மகள் தேன்மொழி (வயது 17). இவர் கழுகுமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாததால், பெற்றோர் கண்டித்தனர்.
சம்பவத்தன்று தேன்மொழி பள்ளிக்கு செல்லவில்லை. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த தேன்மொழி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
உடனே அவரை கழுகுமலை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்த தேன்மொழிக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அவரை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு தேன்மொழியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X