என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தளவாய்புரம் அருகே என்ஜினீயர் விவசாயம் செய்ததை அவமானமாக கருதிய மனைவி தற்கொலை
Byமாலை மலர்17 Sep 2019 4:58 PM GMT (Updated: 17 Sep 2019 4:58 PM GMT)
தளவாய்புரம் அருகே என்ஜினீயர் விவசாயம் பார்த்ததை அவமானமாக கருதிய அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
தளவாய்புரம்:
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரிய மாடசாமி. என்ஜினீயரான இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி ஸ்டெல்லாமேரி (வயது25). இவரும் என்ஜினீயரிங் படித்துள்ளார். இருவருக்கும் 4 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் இருக்கிறான்.
என்ஜினீயரான கணவர் விவசாயம் பார்த்தது ஸ்டெல்லாமேரிக்கு பிடிக்கவில்லை. அதனை அவமானமாக கருதி, அரசாங்க வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இதே போல் சம்பவத்தன்று மாலையும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. குடும்பத்தினர் இருவரையும் சமாதானம் செய்தவுடன் பெரிய மாடசாமி வயல்காட்டிற்கு சென்று விட்டார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஸ்டெல்லாமேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்தார். சாத்தூர் கோட்டாட்சியர் இது குறித்து விசாரணை நடத்துகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X