என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னம் அருகே இரட்டைக்கொலை வழக்கில் 3 பேர் கைது
Byமாலை மலர்17 Sep 2019 4:37 PM GMT (Updated: 17 Sep 2019 4:37 PM GMT)
குன்னம் அருகே நடந்த இரட்டைக்கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவானவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
குன்னம்:
அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 38). இவர் திருமணமாகி குடும்பத்தினருடன் தனது மாமனார் ஊரான பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள நல்லறிக்கை கிராமத்தில் வசித்து வந்தார்.
இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர் நேற்று முன்தினம் அதே கிராமத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி, அருகே அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான சண்முகம்(40) என்பவரும் வந்து மது அருந்தி கொண்டிருந்தார். அளவுக்கு அதிகமாக குடிபோதையில் இருந்த ஆனந்தனுக்கும், சண்முகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன் கீழே கிடந்த கத்தியை எடுத்து சண்முகத்தை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த சண்முகத்தின் உறவினர்கள் சிலர் ஆனந்தனை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த சண்முகத்தின் அண்ணன் முருகானந்தம்(36), உறவினர்கள் சின்னதுரை(35), ஆனைமுத்து(53) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சேட்டு(30) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X