search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சரியாக வேலை இல்லாத காரணத்தால் டெய்லர் கிணற்றில் குதித்து தற்கொலை

    கோவை மதுக்கரை அருகே சரியாக வேலை இல்லாத காரணத்தால் டெய்லர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி(வயது 55). டெய்லர். இவர் தனது மகள் மற்றும் மருமகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக சரி வர வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மகளும், மருமகனும் உறவினர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மயில்சாமியின் மகள் மட்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் மயில்சாமி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கணவருக்கு தெரிவித்தார். அவர் விரைந்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கார்த்திக் மதுக்கரை போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மயில்சாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை மயில்சாமியின் வீட்டின் அருகில் சின்னபிள்ளை தோட்டம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மயில்சாமி பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலை இல்லாத காரணத்தால் மயில்சாமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி மாக்கியம்பட்டி செல்வகணபதி நகரை சேர்ந்தவர் பிரித்விராஜ்(22).பெயிண்டர். இவர் அந்த பகுதியில் உள்ள சுயஉதவி குழு ஒன்றிடம் இருந்து ரூ.19 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் இவருக்கு கடன் கொடுத்த சுயஉதவி குழுவினர் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×