என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சரியாக வேலை இல்லாத காரணத்தால் டெய்லர் கிணற்றில் குதித்து தற்கொலை
கோவை:
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி(வயது 55). டெய்லர். இவர் தனது மகள் மற்றும் மருமகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக சரி வர வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மகளும், மருமகனும் உறவினர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மயில்சாமியின் மகள் மட்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் மயில்சாமி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கணவருக்கு தெரிவித்தார். அவர் விரைந்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கார்த்திக் மதுக்கரை போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மயில்சாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை மயில்சாமியின் வீட்டின் அருகில் சின்னபிள்ளை தோட்டம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மயில்சாமி பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலை இல்லாத காரணத்தால் மயில்சாமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி மாக்கியம்பட்டி செல்வகணபதி நகரை சேர்ந்தவர் பிரித்விராஜ்(22).பெயிண்டர். இவர் அந்த பகுதியில் உள்ள சுயஉதவி குழு ஒன்றிடம் இருந்து ரூ.19 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு கடன் கொடுத்த சுயஉதவி குழுவினர் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்