என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை
Byமாலை மலர்17 Sep 2019 9:26 AM GMT (Updated: 17 Sep 2019 9:26 AM GMT)
ரமணா பட பாணியில் மருத்துவ செலவு தொகையை கொடுக்காததால் நோயாளியை தர மறுத்து தனியார் ஆஸ்பத்திரி அடாவடி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
பழனி தெற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் சிவதாஸ் (வயது48). இவரது மனைவி அமுதா (42). சிவதாசுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதற்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவரது மனைவி சிகிச்சைக்காக சேர்த்தார். சில நாட்கள் உடல் தேறி வந்த நிலையில் அவருக்கு ஒரு யூனிட் ரத்தம் ஏற்பட்டது. பின்னர் மீண்டும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் அமுதாவிடம் உங்களது கணவரை இனிமேல் காப்பாற்ற முடியாது. ரூ.65 ஆயிரம் பணம் கட்டிவிட்டு அவரை அழைத்து செல்லுங்கள் என கூறி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்றும், தனது கணவரை காப்பாற்றி தரும்படியும் கெஞ்சினார். ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் பணத்தை கட்டாமல் அவரது கணவரை அழைத்து செல்ல முடியாது என உறுதியாக தெரிவித்தனர்.
இதனால் மிகுந்த கவலை அடைந்த அமுதா தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்டு பார்த்தார். கிடைக்காததால் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் இது குறித்து தொலைபேசியில் புகார் அளித்தார். அவர் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் பேசுவதாக கூறினார். ஆனால் அதன்பிறகும் டாக்டர்கள் பணத்தை கட்டிவிட்டுதான் சிவதாசை அழைத்து செல்ல வேண்டும் என தெரிவித்தனர். இது குறித்து அமுதா தெரிவிக்கையில், எனது கணவர் ஆஸ்பத்திரியில் சேர்ந்த பிறகு இதுவரை ரூ.10 ஆயிரம் பணம் கட்டி உள்ளேன்.
தற்போது அவரது நிலைமை மோசமாகிவிட்டதாகவும் காப்பாற்ற முடியாது என்று கூறி இதுவரை ஆஸ்பத்திரி செலவாக ரூ.65 ஆயிரம் கட்டிவிட்டு செல்லுமாறு மிரட்டுகின்றனர். எனது கணவரை காப்பாற்றி கொடுத்திருந்தால்கூட எனக்கு சந்தோசமாக இருக்கும்.
தற்போது உள்ள நிலையில் அவரை வேறு ஆஸ்பத்திரிக்கு சேர்க்க வேண்டுமானால் மேலும் பணம் தேவைப்படும். அதற்கும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தடையாக உள்ளனர் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். இச்சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி தெற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் சிவதாஸ் (வயது48). இவரது மனைவி அமுதா (42). சிவதாசுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதற்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவரது மனைவி சிகிச்சைக்காக சேர்த்தார். சில நாட்கள் உடல் தேறி வந்த நிலையில் அவருக்கு ஒரு யூனிட் ரத்தம் ஏற்பட்டது. பின்னர் மீண்டும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் அமுதாவிடம் உங்களது கணவரை இனிமேல் காப்பாற்ற முடியாது. ரூ.65 ஆயிரம் பணம் கட்டிவிட்டு அவரை அழைத்து செல்லுங்கள் என கூறி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்றும், தனது கணவரை காப்பாற்றி தரும்படியும் கெஞ்சினார். ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் பணத்தை கட்டாமல் அவரது கணவரை அழைத்து செல்ல முடியாது என உறுதியாக தெரிவித்தனர்.
இதனால் மிகுந்த கவலை அடைந்த அமுதா தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்டு பார்த்தார். கிடைக்காததால் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் இது குறித்து தொலைபேசியில் புகார் அளித்தார். அவர் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் பேசுவதாக கூறினார். ஆனால் அதன்பிறகும் டாக்டர்கள் பணத்தை கட்டிவிட்டுதான் சிவதாசை அழைத்து செல்ல வேண்டும் என தெரிவித்தனர். இது குறித்து அமுதா தெரிவிக்கையில், எனது கணவர் ஆஸ்பத்திரியில் சேர்ந்த பிறகு இதுவரை ரூ.10 ஆயிரம் பணம் கட்டி உள்ளேன்.
தற்போது அவரது நிலைமை மோசமாகிவிட்டதாகவும் காப்பாற்ற முடியாது என்று கூறி இதுவரை ஆஸ்பத்திரி செலவாக ரூ.65 ஆயிரம் கட்டிவிட்டு செல்லுமாறு மிரட்டுகின்றனர். எனது கணவரை காப்பாற்றி கொடுத்திருந்தால்கூட எனக்கு சந்தோசமாக இருக்கும்.
தற்போது உள்ள நிலையில் அவரை வேறு ஆஸ்பத்திரிக்கு சேர்க்க வேண்டுமானால் மேலும் பணம் தேவைப்படும். அதற்கும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தடையாக உள்ளனர் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். இச்சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X