என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே 6 மாத கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்17 Sep 2019 8:15 AM GMT (Updated: 17 Sep 2019 8:15 AM GMT)
திண்டுக்கல் அருகே 6 மாத கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையை சேர்ந்த பழனியப்பன் (வயது23). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கும் சித்ரா (19) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
சித்ரா தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். பழனியப்பன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் நேற்று சித்ரா பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இன்று காலை சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என திண்டுக்கல் ஆர்.டி. ஓ. உஷா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையை சேர்ந்த பழனியப்பன் (வயது23). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கும் சித்ரா (19) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
சித்ரா தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். பழனியப்பன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் நேற்று சித்ரா பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இன்று காலை சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என திண்டுக்கல் ஆர்.டி. ஓ. உஷா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X