என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்17 Sep 2019 8:09 AM GMT (Updated: 17 Sep 2019 8:09 AM GMT)
திருவள்ளூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அரசு டாஸ்மார்க் இயங்கி வருகிறது. இதன் அருகில் அனுமதி பெறாமல் மதுபானம் கூடம் இயங்கி வந்தது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்ட டாஸ்மார்க் மண்டல மேலாளர் கடையைப் பூட்டி சீல்வைத்து விட்டு சென்றார்.
ஆனாலும் அதன்பிறகும் மீண்டும் அப்பகுதியில் மீண்டும் மது விற்பனை நடந்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் தனிப்படையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மது மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த தேவகோட்டையை சேர்ந்த பிரபு, ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X