search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    சாலிகிராமம் அருகே கடையில் தீ விபத்து

    சாலிகிராமம் அருகே கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    சாலிகிராமம் தசரதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அதே பகுதி அருணாசலம் சாலையில் டயர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 2 மணி அளவில் கடையில் இருந்து கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது.

    விருகம்பாக்கம், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீவிபத்தில் கடையில் இருந்த பொருட்களும் கருகி நாசமானது.

    Next Story
    ×