search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஆரணியில் பஸ் மோதி தொழிலாளி பலி

    ஆரணியில் பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    ஆரணி, வள்ளுவர்மேடு பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம் (வயது 68). கூலித் தொழிலாளி. நேற்று மாலை அவர் பஜார் வீதிக்கு செல்வதற்காக புதுவாயல்- பெரியபாளையம் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது ஊத்துக்கோட்டையில் இருந்து பொன்னேரி நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென சம்பந்தம் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சம்பந்தம் பலியானார். விபத்து நடந்ததும் பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவர் ஆந்திர மாநிலம் ராமகிரி பகுதியை சேர்ந்த செல்வம் என்பது தெரிந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×