என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ரெயில்வே பகுதியில் மரம் வெட்டி விற்ற பணியாளர் உள்பட 4 பேர் கைது
பழனி:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பாலம்பூம்பட்டி பிரிவில் ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக பழனி ரெயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மதுரை கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் ஜெகநாதன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார், பழனி சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் மடத்துக்குளம் பகுதியில் சென்று விசாரித்தனர். விசாரணையில் மடத்துக்குளத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளிகளான செல்வராஜ் (வயது 50), கருப்பசாமி (39), சிவக்குமார் (31) ஆகியோர் பாலம்பூம்பட்டி பிரிவில் ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வேம்பு உள்ளிட்ட 14 மரங்களை வெட்டி, லாரியில் ஏற்றி அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் விற்றது தெரியவந்தது.
மேலும் இவர்களுக்கு ரெயில்வே பணியாளர் பழனி சந்திரசேகரன் (43) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
இதில் சந்திரசேகரன் கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். செல்வராஜ் உள்ளிட்ட 3 பேர் பழனி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்