search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஒரத்தநாடு அருகே வீட்டில் சமையல் செய்த கர்ப்பிணி பெண் தீயில் கருகி பலி

    ஒரத்தநாடு அருகே வீட்டில் சமையல் செய்த கர்ப்பிணி பெண் தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே 34 கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஜி(வயது28). மேள இசைக் கலைஞர். இவரது மனைவி அருள்மொழி (25). இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடங்களாகிறது. தற்போது அருள்மொழி 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி வீட்டில் அருள்மொழி விறகு அடுப்பில் சமையல் செய்துள்ளார். அப்போது அவரது ஆடையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றி படுகாய மடைந்தாராம்.

    உடன் அவரை மீட்டு தஞசை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அருள்மொழி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருள் மொழிக்கு திருமணமாகி 1½ வருடங்களே ஆவதால் தஞ்சை ஆர்.டி.ஓ. சுரேஷ் தனி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×