என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜபாளையத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நர்சு- தந்தை புகார்
ராஜபாளையம்:
ராஜபாளையம் சுந்தர் ராஜபுரத்தை சேர்ந்தவர் காசிராஜன். என்ஜினீயரான இவர் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லாமேரி (வயது28). நர்சாக பணியற்றிய இவர், தற்போது வேலை பார்க்காமல் வீட்டில் இருந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் ஸ்டெல்லா மேரி தூக்கில் பிணமாக தொங்குவதை உறவினர்கள் பார்த்தனர். இது குறித்து அவரது தந்தை சாமி தாசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
மகள் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலால் சாமிதாஸ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் மகள் வீட்டிற்கு வந்தார். அதற்குள் ஸ்டொல்லாமேரி உடல் கிழே இறக்கி வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் சாமிதாஸ் புகார் கொடுத்தார். அதில் ஸ்டெல்லாமேரி சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்