search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    குலசேகரத்தில் இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் - உம்மன்சாண்டி பங்கேற்பு

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்த மத்திய அரசை கண்டித்து குலசேகரத்தில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உம்மன்சாண்டி கலந்துகொண்டு கண்டன பேருரையாற்றுகின்றார்.
    மார்த்தாண்டம்:

    ராஜேஷ்குமார் எம். எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சட்டவிரோதமாக கைது செய்த மத்திய அரசை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன பொதுக்கூட்டம் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் இன்று (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    போராட்டத்திற்கு நான் (ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.) தலைமை தாங்குகிறேன். வட்டார, நகர தலைவர்கள் காஸ்டன் கிளிட்டஸ், ஜெகன் ராஜ், ஜாண் கிறிஸ்டோபர், மோகனதாஸ், ஹனுக்குமார், குமார், பால்ராஜ், கிறிஸ்டோபர், டென்னிஸ், அருள் ராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    குலசேகரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விமல் ஷெர்லின் சிங் வரவேற்கிறார். பொதுக் கூட்டத்தில் வசந்தகுமார் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

    கேரளா மாநில முன்னாள் முதல்-அமைச்சர் உம்மன் சாண்டி கலந்துகொண்டு கண்டன பேருரையாற்றுகின்றார். திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர் ஹமாருதின் நன்றி கூறுகிறார்.

    பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து துணை அமைப்பு மாவட்ட தலைவர்கள், செயல்வீரர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×