என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன?
Byமாலை மலர்16 Sep 2019 7:51 AM GMT (Updated: 16 Sep 2019 7:51 AM GMT)
தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிட உலகிலேயே பழமையான மொழி என்று பிரதமர் மோடி அறிவித்ததை கொண்டாடாமல் நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை:
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பா.ஜனதா மீனவரணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 69 பேருக்கு இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார். மீனவரணி செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொன்.ராதாகிருஷ்ணனிடம் இந்தியை கட்டாயப்படுத்தும் அமித்ஷாவின் கருத்து குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
அமித்ஷாவின் கருத்தை பற்றி யோசிப்பதற்கு முன்பு இன்னொரு கருத்தை முக்கியமாக யோசிக்க வேண்டும்.
இந்த தமிழர்கள் கொண்டாடி இருக்க வேண்டுமல்லவா? அரபு, கிரேக்க மொழிகளைவிட பழமையானது என்ற வரலாற்று பதிவை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டு சென்றிருக்க வேண்டும். கொண்டாடி இருக்க வேண்டும்.
அது தமிழின் கொண்டாட்டம். தமிழர்களின் கொண்டாட்டம். அதை கொண்டாடாமல் நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் என்று சொல்லவைத்துவிட்டார்களே.
ஆளும் அ.தி.மு.க. அரசு பிரதமரின் அந்த கருத்தை வரவேற்று சட்டமன்றத்திலேயே நன்றி சொல்லி இருக்க வேண்டாமா?
தமிழ், தமிழர்கள் என்று மார்தட்டும் தி.மு.க. உள்பட அத்தனை அரசியல் கட்சிகளும் கொண்டாடி இருக்க வேண்டும். பிரதமருக்கு நன்றி சொல்லி இருக்க வேண்டும் ஏன் செய்யவில்லை.
அத்தனை அரசியல் கட்சிகளும் தமிழர்கள் ஒப்பாரி வைக்க மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. சந்தோசப்பட கற்றுக்கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பா.ஜனதா மீனவரணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 69 பேருக்கு இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார். மீனவரணி செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொன்.ராதாகிருஷ்ணனிடம் இந்தியை கட்டாயப்படுத்தும் அமித்ஷாவின் கருத்து குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
அமித்ஷாவின் கருத்தை பற்றி யோசிப்பதற்கு முன்பு இன்னொரு கருத்தை முக்கியமாக யோசிக்க வேண்டும்.
தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிட உலகிலேயே பழமையான மொழி என்று இந்த நாட்டின் பிரதமர் மோடி பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த தமிழர்கள் கொண்டாடி இருக்க வேண்டுமல்லவா? அரபு, கிரேக்க மொழிகளைவிட பழமையானது என்ற வரலாற்று பதிவை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டு சென்றிருக்க வேண்டும். கொண்டாடி இருக்க வேண்டும்.
அது தமிழின் கொண்டாட்டம். தமிழர்களின் கொண்டாட்டம். அதை கொண்டாடாமல் நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் என்று சொல்லவைத்துவிட்டார்களே.
ஆளும் அ.தி.மு.க. அரசு பிரதமரின் அந்த கருத்தை வரவேற்று சட்டமன்றத்திலேயே நன்றி சொல்லி இருக்க வேண்டாமா?
தமிழ், தமிழர்கள் என்று மார்தட்டும் தி.மு.க. உள்பட அத்தனை அரசியல் கட்சிகளும் கொண்டாடி இருக்க வேண்டும். பிரதமருக்கு நன்றி சொல்லி இருக்க வேண்டும் ஏன் செய்யவில்லை.
அத்தனை அரசியல் கட்சிகளும் தமிழர்கள் ஒப்பாரி வைக்க மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. சந்தோசப்பட கற்றுக்கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X