search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்.
    X
    பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள்.

    பொன்னேரி பஸ் நிலையத்தில் பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்

    பொன்னேரி பஸ் நிலையத்தில் பேருந்தை சிறைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பொன்னேரி:

    செங்குன்றத்தில் இருந்து பழவேற்காடு செல்லும் அரசு பஸ் இன்று காலை பொன்னேரி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். பொன்னேரி வந்த கல்லூரி மாணவ- மாணவிகள் 20 பேர் பஸ்பாசை காட்டினர்.

    அதை பார்த்த டிக்கெட் பரிசோதகர்கள் இது விழுப்புரம் கோட்டத்தில் உள்ள பாஸ். இந்த பஸ்சில் வரும்போது டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து மாணவ- மாணவிகள் டிக்கெட் எடுத்தனர். மாணவ- மாணவிகளிடம் இருந்த பஸ்-பாஸ்களை வாங்கிய டிக்கெட் பரிசோதகர்கள் அதை திருப்பி கொடுக்கவில்லை. அலுவலகத்தில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி சென்றுவிட்டனர்.

    பலமுறை கேட்டும் அந்த பஸ்பாசை திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து, பொன்னேரி பஸ் நிலையம் சென்றதும், கல்லூரி மாணவ-மாணவிகள் கீழே இறங்கி பஸ்சை முற்றுகையிட்டனர். பஸ் பாசை திரும்ப கொடுக்கும்படி முழக்கமிட்டனர். இதனால் பரபரப்புஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    Next Story
    ×