என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேன்சி ஸ்டோரில் துணி-கவரிங் நகைகளை திருடிய 5 பெண்கள் கைது
Byமாலை மலர்15 Sep 2019 5:20 PM GMT (Updated: 15 Sep 2019 5:20 PM GMT)
போச்சம்பள்ளி அருகே பேன்சி ஸ்டோரில் துணி மற்றும் கவரிங் நகைகளை நூதன முறையில் திருடிய 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா (வயது 33). இவர் அகரத்தில் பேன்சி ஸ்டோர் மற்றும் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் பேன்சி ஸ்டோருக்கு 5 பெண்கள் வந்தனர்.
அங்கு 5 பெண்களும் கவரிங் நகைகளில் 15 செயின்களையும், பட்டுபுடவை, ரெடிமேட் ஜவுளிகள் ஆகியவை வாங்குவது போல் நடித்து எடுத்து சென்றனர். அப்போது 5 பெண்களும் கடையில் வேலை செய்யும் பெண்களிடம் திவ்யாவிடம் பணம் தருவதாக கூறிவிட்டு, அவர்கள் திவ்யாவிடம் பணம் கொடுக்காமல் நைசாக அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் கடையில் வேலை செய்யும் பெண்கள் திவ்யாவிடம் 5 பெண்களும் தங்கள் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுத்தனரா? என்று விசாரித்தனர். அப்போது அவர் 5 பெண்களும் தன்னிடம் பணம் எதுவும் தரவில்லை என்று கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா மற்றும் கடையில் வேலை செய்யும் பெண்கள் உடனடியாக ஊர் பொதுமக்கள் உதவியுடன் 5 பெண்களை தேடினார்.
அப்போது அகரத்தில் பஸ்சுக்காக காத்திருந்த 5 பெண்களை ஊர் பொதுமக்கள் உதவியுடன் திவ்யா கையும், களவுமாக பிடித்து நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பெண்களிடம் விசாரணை நடத்தினர். இதில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கந்திலியை அடுத்த அழகியபுதூர் சேர்ந்த கண்ணம்மா (70), கல்யாணி (36), சுஜதா(35), சீதா (35), சுமதி (39) ஆகிய 5 பேர் என்பதும், அவர்கள் திவ்யாவை ஏமாற்றி ஜவுளி மற்றும் கவரிங் நகைகளை திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஜவுளி பொருட்கள் மற்றும் கவரிங் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X