search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

    தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் முழுவதும், கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக அரூரில் 112 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 30 மில்லி மீட்டரும், தர்மபுரியில் 3 மில்லி மீட்டரும், பென்னாகரத்தில் 2 மில்லி மீட்டரும் என்று மொத்தம் 147 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன் மாவட்ட சராசரி 21 மில்லி மீட்டர் ஆகும்.

    இதனால் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×