search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    மதுரை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

    கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை சிந்துப்பட்டியை அடுத்த பி.பி.சாவடி பல்லவன் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வம் மனைவி பவுனு (வயது 48). இவரது உறவினர் இல்ல காதுகுத்து நிகழ்வு, அங்குள்ள கண்ணாத்தாள் கோவிலில் நடந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக பவுனு சம்பவத்தன்று மாலை புறப்பட்டுச் சென்றார். கோவிலில் கிரிவலம் வந்தார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ சிலர் பவுனு அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். இது தொடர்பாக பவுனு கொடுத்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×