என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அயனாவரத்தில் கனிமவளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
Byமாலை மலர்14 Sep 2019 10:18 AM GMT (Updated: 14 Sep 2019 10:18 AM GMT)
அயனாவரத்தில் உள்ள கனிமவளத்துறை அதிகாரில் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தின் முதல் மாடியில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு உதவி இயக்குனராக சீனிவாசராவ் பணியாற்றுகிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில், சவுடு மண் எடுப்பதற்கும், தூர்வாருவதற்கும், செங்கல் சூளையில் மணல் சேமித்து வைக்கவும் இந்த அலுவலகம் அனுமதி வழங்கி உள்ளது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், போலி பில் தயாரித்து, அதிகமாக சவுடு மண் எடுப்பதாகவும் ஏராளமான புகார்கள் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர்கள் பிரேசில், கணேசன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை, 4 மணிக்கு கனிமவளத்துறை அலுவலகத்துக்கு வந்தனர்.
அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். பின்னர் அலுவலகத்தில் இருந்த உதவி இயக்குனர் சீனிவாச ராவ் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் பல கேள்விகளை விடிய விடிய கேட்டறிந்தனர். இந்த சோதனை இன்று காலை 7.20 மணி வரை நடந்தது.
இந்த சோதனையில் சீனிவாசராவின் கைபேசி மற்றும் 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
கனிமவளத்துறை உதவி இயக்குனர் சீனிவாசராவ் வீடு சென்னை அயனாவரத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு இன்று காலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தின் முதல் மாடியில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு உதவி இயக்குனராக சீனிவாசராவ் பணியாற்றுகிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில், சவுடு மண் எடுப்பதற்கும், தூர்வாருவதற்கும், செங்கல் சூளையில் மணல் சேமித்து வைக்கவும் இந்த அலுவலகம் அனுமதி வழங்கி உள்ளது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், போலி பில் தயாரித்து, அதிகமாக சவுடு மண் எடுப்பதாகவும் ஏராளமான புகார்கள் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர்கள் பிரேசில், கணேசன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை, 4 மணிக்கு கனிமவளத்துறை அலுவலகத்துக்கு வந்தனர்.
அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். பின்னர் அலுவலகத்தில் இருந்த உதவி இயக்குனர் சீனிவாச ராவ் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் பல கேள்விகளை விடிய விடிய கேட்டறிந்தனர். இந்த சோதனை இன்று காலை 7.20 மணி வரை நடந்தது.
இந்த சோதனையில் சீனிவாசராவின் கைபேசி மற்றும் 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
கனிமவளத்துறை உதவி இயக்குனர் சீனிவாசராவ் வீடு சென்னை அயனாவரத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு இன்று காலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X