search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மதுரையில் ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் நகை-பணம் அபேஸ்

    மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் நகை- பணத்தை அபேஸ் செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அய்யர்பங்களா ராமலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி மலர்விழி (வயது 47). இவர் மூன்று மாவடியில் இருந்து ஷேர் ஆட்டோவில் ராமலட்சுமி நகருக்கு பயணம் செய்தார்.

    அவருடன் அதே ஆட்டோவில் மேலும் சில பெண்களும் பயணித்தனர். குறிப்பிட்ட இடத்தில் இறங்கிய மலர்விழி தனது கைப்பையை பார்த்தபோது அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து கே.புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்ம பெண்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×