என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியகுளம் அருகே லாரிகளில் மணல் கடத்திய கும்பல் கைது
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் பாப்பன்பட்டி கண்மாயில் அனுமதியின்றி மணல் திருடப்படுவதாக தென்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அரசு அனுமதியின்றி 2 டிப்பர் லாரிகளில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வண்டியில் மண் ஏற்றிக் கொண்டு ஒரு கும்பல் சென்று கொண்டு இருந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்த போது சிலர் தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து 3 பேரை கைது செய்து லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
டி.கள்ளிப்பட்டி அம்பலம் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 42), அம்மாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ரங்கராஜ் (39), ஜே.சி.பி. டிரைவரான தேவதானப்பட்டி அட்டணம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (33) ஆகிய 3 பேரையும் கைது செயதனர்.
வாகனத்தின் உரிமையாளர் கிருஷ்ணன், சாவடிப்பட்டியைச் சேர்ந்த ராஜபிரபு, கைலாச பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (35) ஆகிய 3 பேரும் தப்பி ஓடவே அவர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்