search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பெரியகுளம் அருகே லாரிகளில் மணல் கடத்திய கும்பல் கைது

    பெரியகுளம் அருகே அனுமதியின்றி லாரிகளில் மணல் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் பாப்பன்பட்டி கண்மாயில் அனுமதியின்றி மணல் திருடப்படுவதாக தென்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அரசு அனுமதியின்றி 2 டிப்பர் லாரிகளில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வண்டியில் மண் ஏற்றிக் கொண்டு ஒரு கும்பல் சென்று கொண்டு இருந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்த போது சிலர் தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து 3 பேரை கைது செய்து லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

    டி.கள்ளிப்பட்டி அம்பலம் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 42), அம்மாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ரங்கராஜ் (39), ஜே.சி.பி. டிரைவரான தேவதானப்பட்டி அட்டணம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (33) ஆகிய 3 பேரையும் கைது செயதனர்.

    வாகனத்தின் உரிமையாளர் கிருஷ்ணன், சாவடிப்பட்டியைச் சேர்ந்த ராஜபிரபு, கைலாச பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (35) ஆகிய 3 பேரும் தப்பி ஓடவே அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×