என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிநீர் வழங்கக்கோரி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
Byமாலை மலர்13 Sep 2019 1:53 PM GMT (Updated: 13 Sep 2019 1:53 PM GMT)
குடிநீர் வழங்கக் கோரி திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் யூனியன் பெருங்குடி ஊராட்சியில் உள்ளது பரம்புபட்டி கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடநத 1 வருடமாக அங்குள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
குடிநீர் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதானதால் கடந்த 6 மாதமாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பரம்புபட்டி கிராம மக்கள் குடிதண்ணீரை குடம் 10 ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர்.
மின் மோட்டாரை சரி செய்து உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுதத்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே பொதுமக்கள் ஆத்திரமடைந்து இன்று திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சோனாபாய் விரைந்து வந்தார். அவர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X