என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேல்ராம்பட்டில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
புதுச்சேரி:
புதுவை வேல்ராம்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி மீனா. இவர்களது மூத்த மகன் பிரசாந்த் (வயது 18). இவர், வில்லியனூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இதற்கிடையே பிரசாந்துக்கும், அவருடன் படிக்கும் கல்லூரி நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிரசாந்துடன் அவரது நண்பர்கள் பேசாமல் இருந்து வந்தனர். இதன் காரணமாக பிரசாந்த் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இதனால் தற்கொலை முடிவை கையில் எடுத்த பிரசாந்த் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார்.
மறுநாள் காலை வீட்டில் மயங்கி கிடந்த பிரசாந்திடம் அவரது தாய் மீனா விசாரித்த போது எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரசாந்தை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை பிரசாந்த் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து பிரசாந்தின் தாய்மாமன் செந்தில்முருகன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்