என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை தாசில்தார் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை - போலீசார் விசாரணை
Byமாலை மலர்13 Sep 2019 9:00 AM GMT (Updated: 13 Sep 2019 9:00 AM GMT)
தஞ்சையில் தாசில்தார் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சை ரகுமான் நகரைச் சேர்ந்தவர் அருணகிரி (வயது42). இவர் தஞ்சை கலால் துறையில் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை தஞ்சை தாசில்தாராக பணியாற்றினார்.
இவர் நேற்று காலை 10 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் நடந்த ஒரு உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான சென்றார்.
பின்னர் மாலை 3.15 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டார். மேலும், பின்புறக்கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ. 70 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும், மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சை ரகுமான் நகரைச் சேர்ந்தவர் அருணகிரி (வயது42). இவர் தஞ்சை கலால் துறையில் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை தஞ்சை தாசில்தாராக பணியாற்றினார்.
இவர் நேற்று காலை 10 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் நடந்த ஒரு உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான சென்றார்.
பின்னர் மாலை 3.15 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டார். மேலும், பின்புறக்கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ. 70 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும், மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X