என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளை - 3-வது முறையாக மர்ம நபர்கள் கைவரிசை
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு, வளைக்குண்டு என்ற இடத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் கடையை ஊழியர்கள் மூடிச் சென்றனர்.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் மதுக்கடையின் வெளிப்புறம் இருந்த கண்காணிப்பு கேமிராவை முதலில் மேல் நோக்கி துப்பினர். பின்னர் உருட்டு கட்டையால் மின் மீட்டர் இணைப்பை அடித்து உடைத்து கடையின் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதைத் தொடர்ந்து மதுக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் உயர்ரக மதுப்பாட்டில்கள் மற்றும் கடை மூடுவதற்கு முன்பு கடைசியாக கல்லாவில் இருந்த ரொக்கப்பணம், சில்லறை காசுகளையும் அள்ளி தப்பி சென்றுவிட்டனர்.
முதலில் விற்பனையான ரொக்கப்பணம் பாதுகாப்பாக வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டதால் அது தப்பியது. சுமார் ரூ. 5 ஆயிரம் வரை கொள்ளை போய் இருக்கும் என்று தெரிகிறது.
இந்த மதுக்கடையில் கடந்த 6 மாதங்களில் தற்போது 3-வது முறையாக திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்