என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாம்பவர்வடகரை மகளிர் குழு தலைவி மீது ரூ.25 லட்சம் மோசடி புகார்
Byமாலை மலர்12 Sep 2019 9:31 AM GMT (Updated: 12 Sep 2019 9:31 AM GMT)
சாம்பவர்வடகரை மகளிர் குழு தலைவி மீது ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
சாம்பவர் வடகரை:
சாம்பவர் வடகரையை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சாம்பவர் வடகரை சுபேதார் தெருவை சேர்ந்தவர் மாடக்கண்ணு (வயது50). இவரது மனைவி புஷ்பம் (45). புஷ்பம் 20 பேர் கொண்ட 2 தனியார் மகளிர் குழுக்களுக்கு தலைவியாக உள்ளார்.
இந்நிலையில் மகளிர் குழு மூலம் வசூல் செய்த பணத்தை தனியார் நிறுவனத்தில் கட்டாமல் தனது மகன்கள் படிப்பிற்காக செலவு செய்துள்ளார். இதே போல் 20 பெண்களிடம் அவர்களது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று ரூ.25 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தனியார் குழு நிறுவனத்தினர் நேரடியாக வந்து குழு உறுப்பினர்களிடம் பணம் கட்டுமாறு கேட்டனர். அப்போது நாங்கள் குழு தலைவியிடம் பணம் கட்டியுள்ளோம் என கூறினர். இதுபற்றி தலைவியிடம் விசாரித்த போது அவர் சரியாக பதில் கூறவில்லை.
மேலும் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு உறுப்பினர்களிடம் நீங்கள் தான் பணம் பெற்றுள்ளீர்கள். ஆகவே நீங்கள் தான் பணத்தை திருப்பி கட்ட வேண்டும் என கூறினர். எனவே மகளிர் குழு தலைவி புஷ்பம் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாம்பவர் வடகரையை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சாம்பவர் வடகரை சுபேதார் தெருவை சேர்ந்தவர் மாடக்கண்ணு (வயது50). இவரது மனைவி புஷ்பம் (45). புஷ்பம் 20 பேர் கொண்ட 2 தனியார் மகளிர் குழுக்களுக்கு தலைவியாக உள்ளார்.
இந்நிலையில் மகளிர் குழு மூலம் வசூல் செய்த பணத்தை தனியார் நிறுவனத்தில் கட்டாமல் தனது மகன்கள் படிப்பிற்காக செலவு செய்துள்ளார். இதே போல் 20 பெண்களிடம் அவர்களது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று ரூ.25 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தனியார் குழு நிறுவனத்தினர் நேரடியாக வந்து குழு உறுப்பினர்களிடம் பணம் கட்டுமாறு கேட்டனர். அப்போது நாங்கள் குழு தலைவியிடம் பணம் கட்டியுள்ளோம் என கூறினர். இதுபற்றி தலைவியிடம் விசாரித்த போது அவர் சரியாக பதில் கூறவில்லை.
மேலும் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு உறுப்பினர்களிடம் நீங்கள் தான் பணம் பெற்றுள்ளீர்கள். ஆகவே நீங்கள் தான் பணத்தை திருப்பி கட்ட வேண்டும் என கூறினர். எனவே மகளிர் குழு தலைவி புஷ்பம் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X