என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அக்காவுக்கு நாளை திருமணம்: பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி தம்பி பலி
Byமாலை மலர்11 Sep 2019 1:41 PM GMT (Updated: 11 Sep 2019 1:41 PM GMT)
பேராவூரணி அருகே அக்காவுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி தம்பி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்களம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் விக்னேஷ் (வயது 20). இந்த நிலையில் விக்னேசின் அக்காவுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. இதனால் அக்காளின் திருமணத்துக்காக விக்னேஷ் செங்கமங்களம் கடை வீதியில் நள்ளிரவில் வரவேற்பு பேனர்களை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது பேனர் கட்டிய போது திடீரென சரிந்ததால் மேலே சென்ற மின்கம்பி மீது பட்டது. இதில் விக்னேஷ் மீது மின்சாரம் தாக்கியதால் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தார். இதை பார்த்து அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே பலியான விக்னேசை உடலை மீட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விக்னேஷ் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இறந்தது.
அக்காவின் திருமண விழாவுக்காக பேனர் கட்டிய தம்பி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X