search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

    தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 38). இவருக்கும் சுதா தேவி (33) என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாலசுப்பிரமணி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

    மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோது அவர் வர மறுக்கவே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுதா தேவி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே உள்ள நாகலாபுரம் வடக்குப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (58). இவர் சம்பவத்தன்று குடிபோதையில் தனது வீட்டில் தகராறு செய்தார். வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போடவே கோபித்துக் கொண்டு சென்று விட்டார். மறு நாள் காலையில் பார்த்தபோது பாண்டியன் என்பவரது தோட்டத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் அவரது மகன் சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×