என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேலூர் அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் ஓட்டம்
மேலூர்:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள புலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் கருப்புசாமி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரின் ஒப்புதலின்படி இன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இரு வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மணமகள் வீட்டில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென மணமகன் கருப்புசாமி வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக மணமகள் சார்பில் மேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் கருப்புசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தி மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் மாயமானதால் மணமகள் வீடு களை இழந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்