என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவொற்றியூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்11 Sep 2019 8:22 AM GMT (Updated: 11 Sep 2019 8:22 AM GMT)
திருவொற்றியூரில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஜஸ்வந்த் (30). கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (25). உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஜஸ்வந்த் சில மாதங்களுக்கு முன்பு மனைவி ரேகாவை ஊரிலிருந்து அழைத்து வந்து திருவொற்றியூரில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தினார்.
ரேகாவுக்கு சென்னையில் இருக்க விருப்பமில்லை. இதனால் சொந்த ஊருக்கு போய்விடலாம் என்று கணவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு ஜஸ்வந்த் மறுத்துள்ளார்.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு ரேகா கணவன் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஜஸ்வந்த் (30). கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (25). உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஜஸ்வந்த் சில மாதங்களுக்கு முன்பு மனைவி ரேகாவை ஊரிலிருந்து அழைத்து வந்து திருவொற்றியூரில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தினார்.
ரேகாவுக்கு சென்னையில் இருக்க விருப்பமில்லை. இதனால் சொந்த ஊருக்கு போய்விடலாம் என்று கணவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு ஜஸ்வந்த் மறுத்துள்ளார்.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு ரேகா கணவன் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X