search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வியாபாரியை மிரட்டிய போது துப்பாக்கியுடன் ரவுடி கைது

    வியாபாரியை மிரட்டிய போது துப்பாக்கியுடன் ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    கும்மிடிப்பூண்டி ம.பொ.சி நகரை சேர்ந்தவர் ரமேஷ். ரவுடி இவர் மீது கொலை, கொலை முயற்சி, செம்மரக் கடத்தல் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ளன.

    நேற்று காலை அவர் செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரில் ஒரு வியாபாரியை துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தெரிகிறது.

    வியாபாரியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொது மக்கள் ரமேசை விரட்டி பிடித்தனர்.

    பின்னர் அவரை சோழவரம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் வடிவேலன் முருகன் அவரை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தார். கைதான ரமேஷை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×