என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயி வீட்டுக்குள் புகுந்து 42 பவுன் நகை கொள்ளை - போலீசார் விசாரணை
Byமாலை மலர்10 Sep 2019 10:14 AM GMT (Updated: 10 Sep 2019 10:14 AM GMT)
அருப்புக்கோட்டை அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து 42 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாளையம்பட்டி:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வாழ்வாங்கி கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் பெத்துராஜ் (வயது 65). விவசாயியான இவருக்கு அதே தெருவில் சொந்தமாக 2 வீடுகள் உள்ளன.
நேற்று இரவு ஒரு வீட்டை பூட்டிவிட்டு பெத்துராஜ், அவரது மனைவி மீனாட்சி மற்றொரு வீட்டில் தூங்கச் சென்று விட்டனர்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல் அங்கிருந்த மரப்பெட்டியை உடைத்து அதிலிருந்த 42 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பியது. இன்று காலை வீட்டிக்கு வந்த பெத்துராஜ் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் கொள்ளை போயிருந்தன.
இதுகுறித்து பந்தல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் தடயங்களையும் போலீசார் சேகரித்தனர். கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 42 பவுன் நகையை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வாழ்வாங்கி கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் பெத்துராஜ் (வயது 65). விவசாயியான இவருக்கு அதே தெருவில் சொந்தமாக 2 வீடுகள் உள்ளன.
நேற்று இரவு ஒரு வீட்டை பூட்டிவிட்டு பெத்துராஜ், அவரது மனைவி மீனாட்சி மற்றொரு வீட்டில் தூங்கச் சென்று விட்டனர்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல் அங்கிருந்த மரப்பெட்டியை உடைத்து அதிலிருந்த 42 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பியது. இன்று காலை வீட்டிக்கு வந்த பெத்துராஜ் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் கொள்ளை போயிருந்தன.
இதுகுறித்து பந்தல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் தடயங்களையும் போலீசார் சேகரித்தனர். கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 42 பவுன் நகையை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X