என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பேச்சிப்பாறை அருகே பெண்ணை கற்பழித்த தொழிலாளி கைது
நாகர்கோவில்:
பேச்சிப்பாறை அருகே தச்சமலை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). கட்டிட தொழிலாளி. லட்சுமணன் வீடு அருகே பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.
இதனால் அந்த பெண் வீட்டில் தனியாக தங்கி இருந்தார். இந்த பெண்ணிடம், லட்சுமணன் அடிக்கடி பேச்சுகொடுப்பது வழக்கம்.
லட்சுமணன் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசிவந்தார். இதனை அந்த பெண் கண்டித்தார். என்றாலும் லட்சுமணன் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் வீட்டிற்கு லட்சுமணன் அத்துமீறி சென்றார். அங்கு தனியாக இருந்த பெண்ணுக்கு லட்சுமணன் வலுகட்டாயமாக மயக்க மருந்து கொடுத்தார்.
மயக்க மருந்து கொடுத்ததும் அந்த பெண் மயங்கினார். சிறிது நேரம் கழித்து அந்த பெண் கண்விழித்து பார்த்த போது அவரது உடை கலைந்து இருந்தது. அலங்கோலமான நிலையில் இருப்பதை உணர்ந்த அந்த பெண், தன்னை லட்சுமணன் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதை அறிந்தார்.
அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் லட்சுமணன், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மார்த்தாண்டம் மகளிர் போலீசார் லட்சுமணணை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்