என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பரங்குன்றத்தில் கவரிங் நகைகளை அடகுவைத்து ரூ.15 லட்சம் மோசடி - மேலாளர்- ஊழியர்கள் மீது வழக்கு
Byமாலை மலர்10 Sep 2019 10:06 AM GMT (Updated: 10 Sep 2019 10:06 AM GMT)
தனியார் நிதிநிறுவனத்தில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ. 15 லட்சம் மோசடி செய்த மேலாளர், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை:
மதுரையில் பிரபல நிதிநிறுவனத்தின் கோட்ட உதவி மேலாளர் வேல்முருகன், திருநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் எங்கள் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக தத்தனேரியை சேர்ந்த சந்தனபாண்டி என்பவர் பணியில் இருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு இந்த கிளையின் வரவு- செலவு கணக்குளை ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
திருப்பரங்குன்றம் கிளை மேலாளர் சந்தனபாண்டி வாடிக்கையாளர் ஒருவரின் அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தி, கவரிங் நகைகளை அடகு வைத்து நிறுவனத்தின் பணம் ரூ. 14 லட்சத்து 74 ஆயிரத்தை மோசடி செய்துள்ளார்.
கிளையில் பணிபுரிந்த ஊழியர்கள் காமராஜ், சூர்ய கலா, சுரேந்திரன், வெங்க டேஷ்பாபு, சரவணன் ஆகியோர் மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
புகாரின் அடிப்படையில் திருநகர் போலீசார் தனியார் நிதிநிறுவன கிளை மேலாளர், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் பிரபல நிதிநிறுவனத்தின் கோட்ட உதவி மேலாளர் வேல்முருகன், திருநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் எங்கள் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக தத்தனேரியை சேர்ந்த சந்தனபாண்டி என்பவர் பணியில் இருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு இந்த கிளையின் வரவு- செலவு கணக்குளை ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
திருப்பரங்குன்றம் கிளை மேலாளர் சந்தனபாண்டி வாடிக்கையாளர் ஒருவரின் அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தி, கவரிங் நகைகளை அடகு வைத்து நிறுவனத்தின் பணம் ரூ. 14 லட்சத்து 74 ஆயிரத்தை மோசடி செய்துள்ளார்.
கிளையில் பணிபுரிந்த ஊழியர்கள் காமராஜ், சூர்ய கலா, சுரேந்திரன், வெங்க டேஷ்பாபு, சரவணன் ஆகியோர் மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
புகாரின் அடிப்படையில் திருநகர் போலீசார் தனியார் நிதிநிறுவன கிளை மேலாளர், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X