என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையத்தில் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் கொள்ளை
Byமாலை மலர்10 Sep 2019 6:43 AM GMT (Updated: 10 Sep 2019 6:43 AM GMT)
ராஜபாளையத்தில் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பண்டிட் சுப்பாராஜா தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45), நெல் வியாபாரி.
இவரது தாயார் நெல்லை மாவட்டம், சிவகிரியில் வசித்து வந்தார். அங்கு அவர் இறந்து விட்டதால் முருகன் குடும்பத்தினருடன் சென்றார். இதனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.
5 நாட்களுக்கு பின்னர் முருகன் மற்றும் குடும்பத்தினர் நேற்று வீடு திரும்பினர். வீட்டுக்குள் சென்ற அவர்கள், அங்கு பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து இருப்பது தெரியவர, ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக முருகன் தெரிவித்தார்.
கொள்ளை நடந்த வீட்டில் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பண்டிட் சுப்பாராஜா தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45), நெல் வியாபாரி.
இவரது தாயார் நெல்லை மாவட்டம், சிவகிரியில் வசித்து வந்தார். அங்கு அவர் இறந்து விட்டதால் முருகன் குடும்பத்தினருடன் சென்றார். இதனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.
5 நாட்களுக்கு பின்னர் முருகன் மற்றும் குடும்பத்தினர் நேற்று வீடு திரும்பினர். வீட்டுக்குள் சென்ற அவர்கள், அங்கு பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து இருப்பது தெரியவர, ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக முருகன் தெரிவித்தார்.
கொள்ளை நடந்த வீட்டில் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X