என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடியில் ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரெயில்கள்- பெரும் விபத்து தவிர்ப்பு
Byமாலை மலர்10 Sep 2019 4:18 AM GMT (Updated: 10 Sep 2019 4:18 AM GMT)
காட்பாடி ரெயில் நிலையம் அருகே இரண்டு ரெயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த சம்பவத்தால் பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டது.
காட்பாடி:
காட்பாடியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் ரெயில் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. காட்பாடி ரெயில் நிலையம் அருகே சென்றபோது, அதே பாதையில் சென்னையில் இருந்து காட்பாடி நோக்கி வந்த பயணிகள் ரெயிலும் வந்தது.
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரெயில்கள் சென்றது எப்படி? என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் ரெயில் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. காட்பாடி ரெயில் நிலையம் அருகே சென்றபோது, அதே பாதையில் சென்னையில் இருந்து காட்பாடி நோக்கி வந்த பயணிகள் ரெயிலும் வந்தது.
ஒரே பாதையில் இரண்டு ரெயில்களும் எதிர் எதிரே வந்ததால் பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இரண்டு ரெயில்களின் டிரைவர்களும் துரிதமாக செயல்பட்டு ரெயில்களை நிறுத்தினர்.
100 மீட்டர் இடைவெளியில் இரண்டு ரெயில்களும் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரெயில்கள் சென்றது எப்படி? என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X